திருடு போன, தவறவிடப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தவறவிடப்பட்ட 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அதனை விரைந்து முடிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 100 செல்போன்கள் மீட்டனர். அவை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.