“சிசிர ஜயகொடி சியபத மன்றம்  (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

“சிசிர ஜயகொடி சியபத மன்றம்        (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவித்தார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ வசந்த யாப்பாபண்டார, கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர மற்றும் கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர்  சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றுவதற்காக மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.