ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி


உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவருவதாக தொடர்ந்து பல்வேறு தரப்புக்களிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ரஷ்ய வீரர் ஒருவரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரனிலுள்ள Enerhodar என்ற நகரைச் சேர்ந்த Anastasia Taran (30) என்ற இளம்பெண், Kyiv நகருக்கு அருகிலுள்ள Irpin என்ற இடத்தில் ஹொட்டல் பணியாளரான பணி செய்துவந்துள்ளார். அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ள அவர், ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நகரம் நரகம் போல காணப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பெண்கள் ரஷ்ய படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko என்பவரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உக்ரைன் படையினரிடம் சிக்கிய Dmitrii Alekseevich Paramoshkin என்னும் ரஷ்யப் படைவீரர் ஒருவரை சோதனையிடும்போது, அவரிடமிருந்து ஆணுறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உக்ரைன் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்காக அவர் ஆணுறைகளைத் தயாராக வைத்திருந்ததாக கருதப்படுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.