Nayanthara:அடக் கொடுமையே, அது ஏன் நயன்தாராவுக்கு மட்டும் இப்படி நடக்குது?!

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் லிவ் இன் முறைப்படி வசித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி,
நயன்தாரா
, சமந்தாவை வைத்து தான் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்
விக்னேஷ் சிவன்
. மேலும் அஜித் குமாரின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

நயன்தாராவோ கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில்
திருமணம்
என்று கூறப்பட்டது. மேலும் வாடகை தாய் மூலம் தாயாக தயாராகிவிட்டார் நயன்தாரா என்றார்கள்.

இந்நிலையில் அந்த தகவல் எல்லாம் வெறு வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவே அவர்களுக்கு இல்லையாம்.

அது ஏன் நயன்தாரா விஷயத்தில் மட்டும் இப்படி அடிக்கடி வதந்தி பரவுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்தே நயன்தாரா பற்றி அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்தி எல்லாம் எப்பொழுது தான் அடங்கும் என்பது தெரியவில்லை.

மாஜி அண்ணியுடன் தனுஷ் நெருக்கம்: விளாசும் நெட்டிசன்ஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.