உத்தரக்கண்ட் முதலமைச்சராகப் புஷ்கர் சிங் தாமி இரண்டாம் முறை பதவியேற்பு

உத்தரக்கண்ட் முதலமைச்சராகப் புஷ்கர் சிங் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார்.

உத்தரக்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இன்று டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.