இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

சென்னை அடுத்த மாதவரம் ரவுண்டா அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த பெண், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடியை சேர்ந்த வனிதா, காவங்கரை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மாதவரம் ரவுண்டானா அருகே ரெட்டேரி நோக்கி செல்லும் சாலையில் சென்ற போது அவரது பைக்கில் இருந்து கீழே விழுந்த வனிதா படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அரசு பேருந்து மற்றும் காருக்கு பின்னால் வலது புறமாக வந்துக்கொண்டிருந்த வனிதா, பைக்குடன் சரிந்து கீழே விழும் காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா அல்லது ஏதேனும் வாகனங்கள் மோதியதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.