கடும் இக்கட்டான நிலையில் இலங்கை! பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் சலுகைகள்



சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர்  பசில் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார். 

இன்றையதினம்  ஜனாதிபதி தலைமயில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

மேலும், புதிய பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கடும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.  

பலர் தங்களது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்துக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.