ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் வீர மரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் வீரமரணமடைந்தார். ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜூனிமர் சௌரா பகுதியில் நேற்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் காவலர் அமீர் ஹூசைன் என்பவர் வீரமரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பியோடி தலைமறைவான 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.