ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த ஐஸ்வர்யா

தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
தன் கெரியரில் பிசியாகிவிட்டார். தொடர்ந்து தன் வேலை குறித்து சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுஷோ தன் மகன்களுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்தவர்களோ, ஐஸ்வர்யாவுக்கு வேலை தான் முக்கியம், பிள்ளைகள் இல்லை என்று விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள்.

தாய்ப்பாசத்தை இன்ஸ்டாகிராமில் தான் தெரிவிக்க வேண்டுமா என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தன் பாசத்தை பற்றி பலரும் பலவிதமாக பேசியதை பார்த்த ஐஸ்வர்யா, ஒரேயொரு புகைப்படத்துடன், கவிதை எழுதி அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தார்.

அந்த புகைப்படமும், கவிதையும் வைரலாகிவிட்டது. இதன் மூலம் உலக கவிதை தினத்தையொட்டி கவிதை எழுதியது மாதிரியும் ஆகிவிட்டது, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டதும் ஆகிவிட்டது, தாய்ப் பாசம் இருக்கத் தான் செய்கிறது என்பதை காட்டியும் ஆகிவிட்டது. ஆக, ஒரே போஸ்ட்டில் 3 மாங்காய் அடித்துவிட்டார் ஐஸ்வர்யா.

தனுஷை பிரிந்த
ஐஸ்வர்யா
மன அழுத்தத்தில் வீட்டோடு முடங்கிவிடுவாரோ என ரசிகர்கள் கவலைப்பட்டனர். ஆனால் அவர் அடுத்தடுத்து பிசியாகிக் கொண்டிருப்பது அவர்களை நிம்மதி அடைய செய்திருக்கிறது.

இருப்பினும் உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள், ஒரு குட்டி பிரேக் எடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Aishwarya:ஐஸ்வர்யாவுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்: இது லிஸ்ட்டுலயே இல்லயே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.