அதிகாலையில் உலுக்கிய நிலநடுக்கம்… தரைமட்டமான பாலம்!

தைவான் தலைநகர் தைபேயில் இருந்து சுமார் 182 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை பயங்கர
நிலநடுக்கம்
ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் குலுங்கின.

அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடு குலுங்கியதை உணர்ந்து திடுக்கிட்டனர். உடனே அவர்கள் உறக்கத்தில் இருந்து விழித்து வீதிகளை நோக்கி ஓடினர்.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், புதிதாக கட்டுப்பட்டு வந்த பாலம் இடிந்து தடைமட்டமானது. இதில் ஒருவர் காயமடைந்தாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்… சுனாமி பீதியில் நாட்டு மக்கள்!

அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இரண்டு நிமிட இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்பதும், அவை ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஜப்பானில்
சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.