பந்த் நடத்தியோர் மீது நடவடிக்கை கோரிக்கை| Dinamalar

பெங்களூரு-”ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, ‘பந்த்’ நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பா.ஜ., உறுப்பினர் அருண் வலியுறுத்தினார்.சட்டமேலவையின், பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:உடுப்பியில் ஆறு மாணவியரிடம் ஆரம்பமான ஹிஜாப் விவாதம், மாநிலம் முழுவதும் பரவியது. வழக்கு விசாரணை நடத்திய கர்நாடகா உயர்நீதிமன்றம், மார்ச் 15ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மார்ச் 17ல் சில முஸ்லிம் அமைப்புகள், ‘பந்த்’ நடத்தின.இதனால் அன்றைய தினம், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வர்த்தகம், வியாபாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில், பந்த், போராட்டங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் அசோக்: உறுப்பினரின் இந்த கோரிக்கைக்கு, உள்துறை அமைச்சரிடம் பதில் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.