வாயில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு

கோவை:வாயில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழந்தது.  வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானையை பிடித்த வனத்துறையினர் 2 நாட்களாக சிகிக்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிக்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். யானையின் வாயில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.