'அவருடன்' பாலாவுக்கு ஓவர் நெருக்கம்: மனைவி எரிச்சல்

இயக்குநர் பாலாவும், முத்துமலரும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். முத்துமலருக்கும், அரசியல் தலைவர் ஒருவரின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு தான் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது.

முத்துமலர்
பாதை மாறிச் செல்ல
பாலா
செய்த சில காரியங்கள் தான் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ராமேஸ்வரத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவருடன் பாலா நட்பு பாராட்டியிருக்கிறார்.

பிச்சைக்காரருக்கு பட்டு வேட்டி, சட்டை கொடுத்து அவரை ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு பரிவட்டம் கட்டுமாறு குருக்களிடம் கூறினாராம்.

பிச்சைக்காரருடன் பாலா அதிக நேரம் செலவிட்டது முத்துமலருக்கு பிடிக்கவில்லையாம். வீட்டில் தனியாக நான் இருக்க, இங்கு வராமல் யார், யாருடன் எல்லாமோ இருக்கிறாரே என்று வருத்தப்பட்டாராம் முத்துமலர்.

மது, போதை என்று வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே பாலா தங்கியதும் முத்துமலருக்கு பிடிக்கவில்லையாம். இப்படியே பிரச்சனை பெரிதாகி, பெரிதாகி தான் பிரிந்துவிட்டார்களாம்.

என் பொண்டாட்டியை நாசமாக்குனதே ‘அவங்க’ தான்: பாலா திடுக் தகவல்
இந்நிலையில் முத்துமலரின் மனதை மாற்றியதே சில இயக்குநர்கள், நடிகர்களின் மனைவிமார்கள் தான் என்று புலம்புகிறாராம் பாலா. என் பொண்டாட்டி ஒழுங்கா தான் இருந்தார். அந்த பொம்பளங்களோடு சேர்ந்த பிறகே அவரின் நடவடிக்கை மாறியது என்கிறாராம் பாலா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.