மகாராஷ்டிராவில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ.. சமயோஜிதமாக சிந்தித்து அருகில் இருந்த அணைக்குள் வாகனத்தை இறக்கிய ஓட்டுநர்.!

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீரென தீ பற்றிய நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட வாகன ஓட்டி மேலும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்த அணைக்குள் வாகனத்தை இறக்கினார்.

பால்கர் பகுதியில் வைக்கோல் கட்டுகளுடன் சென்ற மினி லாரியில் திடீரென தீபற்றியதாக கூறப்படுகிறது. வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ வாகனத்தில் பரவாமல் இருக்க சம்யோசிதமாக சிந்தித்த வாகன ஓட்டி அருகில் இருந்த மஸ்வான் அணைக்குள் மினி லாரியை செலுத்தினார்.

சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.