தனுஷ் சொன்ன 'அந்த' வார்த்தையால் கடுப்பாகி ஐஸ்வர்யா அதிரடி?

தனுஷை பிரிந்த பிறகும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தன் பெயருக்கு பின்னால் இருந்த அவரின் பெயரை நீக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
.

அதனாலேயே தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். இந்நிலையில்
ஐஸ்வர்யா
இயக்கிய பயணி காதல் பாடல் வீடியோவுக்காக அவரை வாழ்த்தி ட்வீட் செய்த
தனுஷ்
, தோழி என்கிற வார்த்தையை பயன்படுத்தினார்.

தன்னை தனுஷ் ஃப்ரெண்ட்ஜோனில் போட்டதை பார்த்து கடுப்பாகித் தான் முதலில் ட்விட்டரில் இருந்து அவரின் பெயரை நீக்கினார் ஐஸ்வர்யா என்று பேச்சு கிளம்பியது. ட்விட்டர் தானே ஆனால் இன்ஸ்டாகிராம் கணக்கில் இன்னும் தனுஷ் பெயர் இருக்கிறது என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்தும் தனுஷின் பெயரை நீக்கிவிட்டார் ஐஸ்வர்யா. இதன் மூலம் இனி தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கு இடமே இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

முதலில் தன் அப்பா ரஜினியின் கோபத்தை பார்த்து பயந்து தனுஷுடன் சேர நினைத்தார் ஐஸ்வர்யா. தற்போது யார் என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு என்று கூறுகிறாராம்.

‘அவரை’ பற்றி ஐஸ்வர்யா சொன்னது ரொம்ப சரி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.