சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமணம்.!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 59 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மேலும் புதிய நீதிபதிகளை பணி அமர்த்துவது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் நிதுமோலு மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை சென்னையின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு வருடத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.