மீண்டும் சீனுக்கு வந்த நித்தி… எல்லாம் பாலியல் மேட்டர்தான்!

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் அவர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்தபடி தமது உரைகள், ஆடல், பாடல்கள் அடங்கிய வீடியோக்களை
நித்யானந்தா
அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசில், வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார்.

சாரக் லான்ட்ரி என்ற அந்த பெண், பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள புகாரில், ‘கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தாவும், அவரது சீடர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டை சேர்ந்த பெண் நித்யானந்தா மீது இ-மெயில் மூலம் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

நித்தி மீதி பாலியல் குற்றச்சாட்டு

மாறாக இ-மெயில் மூலம் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்துள்ளனர்.

பிரதி போலீசில் புகார் அளித்துள்ள அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.