தீர்த்தஹள்ளி கிராமங்களில் ஒற்றை யானையால் பீதி| Dinamalar

ஷிவமொகா-தீர்த்தஹள்ளியின் பெரும்பாலான கிராமங்களில், ஒற்றை யானை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. தோட்டம், வயல்களில் புகுந்து பயிர்களை பாழாக்குவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.ஹாசன் தீர்த்தஹள்ளியின், கீகடி, முட்லுமனே, ஹசகோடு, ஹளகத்தே, தளலே, கல்மனே என, பல கிராமங்களில் இரண்டு ஆண்டுகளாக, ஒற்றை காட்டு யானையின் தொந்தரவு உள்ளது. இரவில் நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது.கிராமத்தினர் உயிரை கையில் பிடித்து நடமாடுகின்றனர். நுாற்றுக்கணக்கான ஏக்கர் பாக்கு தோட்டத்தை நாசமாக்கியதுடன், பயிர்களையும் மிதித்து அழித்துள்ளது.இந்த ஒற்றை யானை எங்கிருந்து வந்தது என்பதே தெரியவில்லை. வனத்துறையினர் முகாமிட்டிருந்தும் கூட, யானையின் தொந்தரவை போக்க முடியவில்லை. ஆகும்பே பகுதியிலும் கூட, ஒற்றை யானை 15 ஆண்டுகளாக தொல்லை கொடுக்கிறது. இதை பிடிக்கவே முடியவில்லை. அதுபோல மன்டகத்தே சுற்றுப்பகுதியில் நடமாடும் யானையை பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.