உ..பி. யில் நாளை பிரம்மாண்ட விழா… மோடி பங்கேற்பு!

அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றது.

இதனையடுத்து முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் லக்னௌவில் இன்று நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர்
யோகி ஆதித்யநாத்
சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரினார்.

யோகி ஆதித்யநாத்தின கோரிக்கையை மாநில ஆளுநர் ஏற்றுகொண்டதையடுத்து அவர் நாளை முதல்வராக பதவியேற்கிறார். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.