'ராதே ஷ்யாம்' நஷ்டம் – ரூ.50 கோடியை திருப்பி கொடுத்தாரா பிரபாஸ்

பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்து சாமீபத்தில் வெளியான படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. பெரும்பாலும் ஆக் ஷனை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு முழுக்க காதல் படமாக இருந்ததால் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் படம் வசூலை ஈட்டவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது . இதையடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்துக்காக வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.