சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த குடும்பம்: பகீர் கிளப்பிய சம்பவம்


சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நால்வர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ள நிலையில், ஐந்தாவது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

Montreux பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டிடத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாட் மாநில பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை உறுதியான தகவல் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

40 வயது கடந்த இருவர், இரு இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் என ஐவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.