சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு போராட்டங்கள் தடை உத்தரவு.!

சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு போராட்டங்கள் நடத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், சிதம்பரம் நகரில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.