அன்றிரவே முடிவாகிடுச்சு: தனுஷ், ஐஸ்வர்யா நண்பர்கள் திடுக் தகவல்

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அவர்கள் அறிவித்தபோதிலும் மீண்டும் சேர்வார்கள் என்று ரசிகர்கள் நம்பினார்கள்.

அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் தனுஷுக்கு இனி என் வாழ்க்கையில் இடமே இல்லை என்பது போன்று ஐஸ்வர்யா ஒரு விஷயம் செய்திருக்கிறார்.

அதாவது, சமூக வலைதள கணக்குகளில் இருந்து தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கிவிட்டார் ஐஸ்வர்யா.

முன்னதாக சமாதான பேச்சுவார்த்தை நடந்தபோது சென்னையில் நடந்த நள்ளிரவு பார்ட்டியில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டார்கள். பார்ட்டி முடிவதற்குள் இருவரும் பேசிவிடுவார்கள் என்று நட்பு வட்டாரம் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்களாம்.

அவர்களின் செயலால் பார்ட்டிக்கு வந்த நண்பர்கள் ஏமாற்றம் அடைந்தார்களாம். தனுஷும், ஐஸ்வர்யாவும் இனி சேர வாய்ப்பே இல்லை என்பது அன்றிரவே எங்களுக்கு தெரிந்துவிட்டது என்கிறார்கள்.

சொல்லப் போனால் மகன்கள் யாத்ரா, லிங்கா வளரட்டும் என்று தான் காத்திருந்தார்கள். அவர்கள் வளர்ந்ததும் பிரிந்துவிட்டனர். பேசி வைத்து காத்திருந்த ஜோடி மீண்டும் சேர்வது நடக்காத காரியம் என்கிறது நட்பு வட்டாரம்.

Dhanush:ஐஸ்வர்யா விஷயத்தில் நினைத்ததை சாதித்த தனுஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.