உலக நாடுகளில் கொரோனா:மக்கள் விழிப்புடனிருக்க வேண்டும்

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழ்நாட்டில் தற்போது வரையில், முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்து, அப்பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படக்கூடிய தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.