இலங்கையில் 10 மணி நேர மின் வெட்டு வர வாய்ப்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் 6 மணி நேர மின் வெட்டு 10 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய சமையல் காஸ் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் கிடைக்காததால் தொழில்கள் முடங்கி உள்ளன.

latest tamil news

இங்குள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி குறையும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேர மின் வெட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.