போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுத்தம்

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து ராணுவ தளத்தில் அமெரிக்க விமானப்படையின் Blackhawk ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ வாகனங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. நேட்டோவின் கிழக்குப்பகுதியை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ தளத்தில் வான் பரப்பில் இருந்து தாக்கும் பேட்ரியாட் ரக ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் பதட்டம் முன்பை விட அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.