அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி| Dinamalar

புதுச்சேரி : பிள்ளையார்குப்பம் அரசு பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் தலைமை ஆசிரியர் பஞ்சாத்தம்மா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆதிகேசவன் வரவேற்றார்.ஆசிரியர்கள் காண்டீபன், நடேசன் ஆகியோர், மாணவிகளுக்கு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து விளக்கினர்.பயிற்சி முடித்த மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.ஆசிரியர்கள் தேன்மொழி, அன்னை அபிராமி, ஜெயபாரதி, கந்தசாமி ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். பயிற்சியாளர் அன்பரசி கவுரவிக்கப்பட்டார். உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.