#சேலம் || கந்துவட்டி கும்பல் அராஜகம் : கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்.! 

சேலம் அருகே கந்து வட்டிக்கு கொடுத்த நபர், கர்ப்பிணிப் பெண்ணை தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி திரிஷா, இவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

அதே பகுதியில் கறி கடை நடத்தி வரும் நாகராஜன், செந்தில் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அதில் 16 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதி மீதம் 4000 ரூபாய் செலுத்தவில்லை என்று கூறி, செந்தில் உள்ளிட்டவர்கள் திரிஷா மற்றும் நாகராஜனை கடையில் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நாகராஜன் மற்றும் அவரின் மனைவி திரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.