இனி அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கொண்டாடப்படும்- சுற்றுச்சூழல் அமைச்சர்

இந்தியாவில் அசாம், பீகார், ஜார்க்காண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீண்ட ஆழமான நதிப் பகுதிகளில் டால்பின்கள், நன்னீர் டால்பின் இனங்கள் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்திய நதிகளில் சுமார் 3,700 டால்பின்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கொண்டாடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு அதன் 67வது கூட்டத்தில் இந்த ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதியை தேசிய டால்பின் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பை உருவாக்குவது காட்டு இனங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்ததாகும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.