மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிநெறிக் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சிறுவர்களுக்கான செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய பயிற்சிநெறிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கு வளவாளர்களாக மாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் வீ.முரளிதரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக

முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் ரீ.மேகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களை சுதந்திரமான புறச்சூழலில் கற்பிக்கும் வண்ணமான வடிவமைப்பில் முன்பள்ளி பாடசாலைகளை அமைப்பதற்காக முறைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவிற்கு பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர் மொகமட் றில்லா உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.