டோனியின் தலைமையின் கீழ் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: பாப் டு பிளெஸ்சிஸ்

மும்பை,
ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.டோனி. இவர் நேற்று சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், சென்னை அணியின்ன் புதிய கேப்டனாக ரவீந்திர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை அணியில் விளையாடியது குறித்தும், டோனியின் கேப்டன்சி குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் கூறியதாவது;
“டோனியின் கேப்டன்சியின் கீழ் சென்னை அணியில் நீண்ட காலம் விளையாடியுள்ளேன். அவரிடம் நிறைய நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளன. களத்தில் இக்கட்டான சூழலில் அவரின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை என்னால் நெருக்கமாக இருந்து காண முடிந்தது. டோனியில் கேப்டன்சியின் கீழ் நீண்ட காலம் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமான ஒன்று”. இவ்வாறு டு பிளெஸ்சிஸ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.