வாகன போக்குவரத்து அதிகமாகியுள்ளதால் சாலையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சென்னை: வாகன போக்குவரத்து அதிகமாகியுள்ளதால் சாலையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். சாலையை விரிவுபடுத்த காரணம் என்ன? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். சாலைகளை விரிவுபடுத்தும்போது மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.