புதுச்சேரியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 278 பேரிடம் செய்த சோதனையில் யாருக்கு தொற்று பாதிப்பு இல்லை.மொத்த பாதிப்பு 1,65,774 ஆக உள்ளது.

புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர், மாகியில் 2 பேர், வீட்டு தனிமையில் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் டோஸ் 1,354 பேர், இரண்டாவது டோஸ் 1,019 பேர், பூஸ்டர் டோஸ் 108 பேர் என 2,481 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.மாநிலத்தில் இதுவரை 9,41,685 பேருக்கு முதல் டோஸ், 6,69,943 பேருக்கு இரண்டாவது டோஸ், 13,696 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.