திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளகாதலி… ஆசிட் வீசிய இளைஞரை தேடி வரும் காவல்துறை..!

திருமணத்திறு வற்புறுத்திய கள்ளகாதலி மீது இளைஞர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராம லட்சுமி. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழும் இவருக்கு செல்வம்  என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும் நெருங்கி வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.  முத்துராமலெட்சுமி செல்வத்திடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வீட்டில் வாங்கி வைத்திருந்த ஆசிட்டை  வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கள்ளகாதலன் செல்வத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.