ஒரே நாளில் 4,100 பேர் கொரோனாவால் பலி? விடுபட்ட கணக்கீட்டால் குழப்பம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தினசரி கொரோனா பலி பட்டியலில் நேற்று 4,100 பேர் இறந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த 22, 23, 24ம் தேதிகளில் தினசரி ெதாற்று பாதிப்பு சற்றே அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் 1,938 பேருக்கும், நேற்று 1,685 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 ஆக அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்புகளுக்கு ஆளானவர்களில் ஒரே நாளில் 4,100 பேர் (நேற்றைய பலி எண்ணிக்கை 83) பலியாகி உள்ளனர்.  இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கொரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,349 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,24,80,436 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,82,87,68,476 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,07,479 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 6,58,489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 78,63,02,714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.