கோஷ்டி மோதல்: இருவர் காயம்| Dinamalar

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் இரு தரப்பிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன்,38. இவர், கடந்த10 ஆண்டுகளுக்கு முன், முத்தியால்பேட்டை சோலை நகரில் வசித்தார். மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் நாவற்குளம் சென்று வசித்தார்.தியாகராஜன் நேற்று கட்டட வேலைக்காக முத்தியால்பேட்டை சோலை நகருக்கு சென்றார்.

தியாகராஜன் கடற்கரையில் சிறுநீர் கழித்தபோது அப்பகுதியைச் சேர்ந்த உதயக்குமார், 60; தனது வீட்டின் அருகில் எப்படி சிறுநீர் கழிக்கலாம் என, கண்டித்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உதயக்குமார் இரும்பு கம்பியால் தியாகராஜனை தாக்கினார். தியாகராஜன் ஆதரவாளர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கோபி, ராஜவேலு ஆகியோர் உதயக்குமாரை தாக்கினர். படுகாயமடைந்த உதயக்குமார் உட்பட இருவர் காயமடைந்தனர்.இது குறித்த புகார்களின் பேரில், இருதரப்பினர் மீதும் சோலை நகர் புறக்காவல் நிலைப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.