சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து தீ விபத்து… தந்தை, மகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

வேலூரில், வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த துரைவர்மா, கடந்த 2 நாட்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டின் முன்பக்கத்தில் வைத்து எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு நேற்றிரவு துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் உறங்கச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவில் எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து அருகிலிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்திலும் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவி வீட்டிற்குள்ளும் தீப்பற்றிய நிலையில், இதனையறிந்த துரைவர்மாவும் அவரது மகளும் விட்டு வெளியேற முடியாமல் கழிவறைக்கு சென்று பதுங்கியதாகவும் தீயால் வீடு முழுவதும் புகை சூழ்ந்து, இருவருமே கழிவறையிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறியும், வெகு நேரமாக மின் இணைப்பிலேயே இருந்ததால் பேட்டரி சூடாகி வெடித்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.