டிராக்டர் முந்தமுயன்ற இருசக்கர வாகனம்.. இளைஞர் உடல்கருகி பலி..!

டிராக்டரை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சாலையில் நாகர்கோவிலை சேர்ந்த  உதயா (28) என்ற இளைஞர் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு நொறுங்கி தீப்பிடித்தது. இதில், உதயா சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பி சென்ற டிராக்டர் ஒட்டுநரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.