IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

இந்திய எரிபொருள் நிறுவனம் நேற்று இரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.

30 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாளை இலங்கை வரவிருப்பதாக ,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.