புதுச்சேரி: பந்தல் சரிந்து விபத்து – 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

புதுச்சேரியில் கோவில் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி பாரதி வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி, அவரது மகன் வேலு, சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர் .
image
அப்போது திடீரென பந்தல் சரிந்து விழுந்துள்ளது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 4 பேரும் சரிந்து விழுந்துள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் வேலு, சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
image
இதைத் தொடர்ந்து லட்சுமணன் மற்றும் முத்துலிங்கம் ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பெரியக்கடை போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.