மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள்…

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை அனுமதித்துள்ளது எய்ம்ஸ் நிர்வாகம்.

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 4 ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் மாநில அரசுக்கு முறையாக தெரியப்படுத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.