தமிழகத்தில் மின்வெட்டு என்று சொல்லாதீர்கள் – அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு 96 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் மாற்றியுள்ளோம்.

96 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின்வெட்டு என்று மொத்தமாக குற்றம் சாட்டக்கூடாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.