கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நாளை பதவி ஏற்பு- பிரதமர் மோடி பங்கேற்பு

பனாஜி:

கோவா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்லில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவி ஏற்கிறார். இதற்கான பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.