துபாய் கண்காட்சி முடிவடையும் நிலையில் தமிழக அரங்கை திறந்தது ஏன்?- முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

சென்னை:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க முதலமைச்சர் துபாய் செல்லவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே முதலமைச்சர் துபாய் சென்றுள்ளார் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
துபாயில் அவர்கள் தொழில் தொடங்கவே சென்றுள்ளார்கள் என்று மக்கள் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. துபாய் கண்காட்சி முடிவடையும் நிலையில் தமிழ்நாட்டிற்கான அரங்கை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. 
நான் வெளிநாடு சென்றபோது அந்த துறையின் அமைச்சர், செயலாளர் வந்தார்கள். அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை. சசிகலா குறித்து ஓ. பன்னீர் செல்வம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.  தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.