மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி

கிறிஸ்ட்சர்ச்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் மித்தாலி ராஜ் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.

275 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இந்தியா இழந்தது என்பது குறிப்பிடத்தகது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.