தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி:
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், மாநிலங்களில் மின் சேவை பாதிக்கப்படாத படி இருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின் தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், மின்தட்டுப்பாடு குறித்த புகார்கள் வந்தால் அதை நிவர்த்தி செய்ய 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.