தமிழக மீனவர்கள் மீது பலப் பிரயோகம் கூடாது – இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யக் கூடாது என்றும், மனிதநேய அணுகுமுறையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறிக்கும்போது உயிரிழப்பு ஏற்படாமல் கவனத்துடன் இருக்கும்படி இலங்கையை இந்தியா கேட்டுக்கொண்டதாகத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எந்தச் சூழ்நிலையிலும் மீனவர்கள் மீது பலத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும், மனிதநேய அணுகுமுறையைக் கையாள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது. மீனவர்களுக்குச் சாதகமான கடல்சார் ஐ.நா. சட்ட விதிகளைப் பின்பற்றக் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.