பாஜக ஆட்சியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தேடிவரும் பிரச்சனை!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் அண்மையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கோர்ட் வரை சென்ற பிறகு இந்த பிரச்னை தற்போது அடங்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு மற்றொரு பிரச்னை தற்போது தலைதூக்கியுள்ளது.இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுதான் அந்த பிரச்னை.

முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டம் கவுப் மாரிகுடி திருவிழாவின்போது, இந்துக்கள் அல்லாத வியாபாரிகளை வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு கோவில்களிலும் இதேபோன்ற பேனர்கள் காட்டப்பட்டிருந்தன.

இந்த எதிர்ப்பு மனநிலை தற்போது மாண்டியா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.

மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோயில் அருகே முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம். கர்நாடக மாநில சட்டசபையில் எழுப்பப்பட்டது.

அப்போது, ‘கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள தெருவோரங்களில் கடை வைத்திருக்கும் இந்துக்கள் அல்லாத பிற சமூகங்களை சேர்ந்த வியாபாரிகளுக்கு இது பொருந்தாது என்றும், அவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி2 நாட்கள் தொடர் மின்வெட்டு – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.