இந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவு 

இந்தியாவில் நாளாந்த கொரோனா வைரசு தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவடைந்துள்ளது. 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை இந்திய சுகாதாரத்துறை இன்று (27) வெளியிட்டது.

அதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,660-ஐ விட சற்று குறைவாகும். இதனால், இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1,826 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 இலட்சத்து 82 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.