அடுத்த மாதம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் புதிய ரயில் சேவை

வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் தொடக்கம் இந்த புதிய கடுகதி ரெயில் சேவை ஆரம்பமாகவுள்ளது.

இந்த ரெயில் வெள்ளவத்தையில் இரவு 10.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதன் பின்னர் அதிகாலை 5.30ற்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் என்று ரெயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முழுமையாக குளிரூடப்பட்டுள்ள இந்த ரெயில் 500 ஆசனங்களைக் கொண்டுள்ளது. ரெயில்வே திணைக்களத்தின் கையடக்க செயலியின் மூலம் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.